ஏக்கம் - kavithai Views : 548
Tagged in : kavithai
0 0
Send mail

ஏக்கம்



அகப்பையில் ஒன்றும்
வராது என்று தெரிந்தும்
காலி பானையை
துலாவும் ஏழை

பசியை விரட்ட
ஈரத்துணியை கட்டிக்கொண்டு
படுப்பது போல்

உன்னிடம் இருந்து மின்னஞ்சல்
வராது என்று தெரிந்தும்
நிதம் என் மின்னஞ்சலை
சரிப் பார்க்கிறேன்

நீ ஒரு மின்னஞ்சல்
அனுப்ப மாட்டாயா
என்ற ஏக்கத்துடன்

ஏமாற்றம் மிஞ்சவே
உன் நினைவை சுமந்து
உறங்கச் செல்கிறேன்

உன் என்னம்
சுமக்கும் உறிமையாவது
மிஞ்சியதே ! எனக்கு !
By Sanju, On - 2010-04-07



    Login to add Comments .