ஒரு தாயின் கண்ணீர் கடிதம்......

by Sanju 2010-02-23 18:54:47

ஒரு தாயின் கண்ணீர் கடிதம்......



பத்து மாதம் பத்தியம்
இருந்து பெற்றேன்....

நீயே உலகம் ஆனாய்
உயிரும் ஆனாய்....

உன் வாழ்க்கை பிரகாசிக்க .....
நானே மெழுகுவர்த்தியானேன்....


விழி மூட நேரமில்லை,....
உழைப்பிற்கோ காலம் இல்லை....

வலி இல்லா இதயம் இருந்ததில்லை
விதி இல்லா வாழ்க்கையும் இல்லை..

கூட்டை விட்டு பறக்கும் பறவை போல்
நீயும் பறந்துதான் போனாய் பணத்திற்காக....

கடமையை காசோலையில் அனுப்பிவிட்டாய்...
மறந்த பாசமோ மடிக்கப்பட்ட கடிதத்தில் கூட் இல்லை....
.
இமைகளும் இதயமும்
கனததிருக்க காத்திருக்கிறேன்.....

ஒருமுறை வந்துவிடு.......
என் கடைசி மூச்சிக்குள்..... !!

Tagged in:

2002
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments