படம் ஆயிரத்தில் ஒருவன் - அதோ அந்த பறவை போல வாழவேண்டும்

by Sanju 2010-02-04 19:22:28

படம் : ஆயிரத்தில் ஒருவன்
விஸ்வனாதன்-ராமமூர்த்தி

பாடல்: அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
குரல்: டி எம் சௌந்தரராஜன் குழுவினர்
வரிகள்: கண்ணதாசன்


அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(லலாலா லா...)

(அதோ அந்த)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல்னீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ அந்த)

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ அந்த)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(அதோ அந்த)

Tagged in:

1510
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments