படம் இரு மலர்கள் - வெள்ளி மணி ஓசையிலே

by Sanju 2010-02-04 19:55:37

படம் : இரு மலர்கள்
பாடல்: வெள்ளி மணி ஓசையிலே
குரல்: பி சுஷீலா
வரிகள்: வாலி


வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோவிலிலே (2)
வள்ளல் வரும் வேளையிலே (2)
வாழ்வு வரும் பூமகளே

(வெள்ளி)

பிறந்துவந்தேன் நூறு முறை மன்னவன் கை சேரும்வரை (2)
தவமிருந்தேன் கோடி முறை (2)
தேவன் முகம் காணும்வரை

(வெள்ளி)

மணிவிளக்காய் நானிருக்க மாளிகையாய்த் தானிருக்க (2)
மனது வைத்தான் சேர்ந்திருக்க (2)
கருணை வைத்தான் கைகொடுக்க

(வெள்ளி)

Tagged in:

1594
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments