காதல் காலாவதி!

by GJSenthil 2010-02-23 18:39:56

என் முகம் நீ பார்த்ததில்லையே என்றேன்
உன் அகம் பார்த்திறுக்கின்றேனே என்றாய்.

என் குரல் நீ கேட்டதில்லையே என்றேன்.
உன் குணம் தெரிந்திருக்கின்றேனே என்றாய்.

என் நிறம் நீ அறிந்ததில்லையே என்றேன்
உன் நினைவிலேயே அலைகிறேனே என்றாய்.


இருதியாய்

என் விருப்பத்தை நீ விரும்பவில்லையா என்றாய்
உன் செவி சேர்ந்திட மௌனமே கொண்டுள்ளேன் என்றேன்.

ஆனால்

இம்மௌனம் சம்மதம் சொல்வதற்கில்லை!
உன் காதல் பயணத்தை முடித்திடவே!

Tagged in:

2151
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments