எந்தன் கண் முன்னே பாடல் வரிகள் - நண்பன்

by Geethalakshmi 2012-01-06 13:11:21

எந்தன் கண் முன்னே பாடல் வரிகள் - நண்பன்




எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!

யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!

இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்

கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?

Tagged in:

1996
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments