கூந்தலிலிருந்து வழியும் வாசனை...

by Rameshraj 2010-02-03 12:27:40

இப்போதுதான் முதன்முறையாக
அவளைப் பார்க்கிறேன்...
தோட்டத்திலிருக்கும்
பூக்களை கொய்கிறபோது
வருகிற வாசனையைப்போல்
மயிர் கற்றைகளை சரிசெய்கிறபோது
அவள் கூந்தலிலிருந்து
வாசனை வழிகிறது...





இதுவரை காணாத அழகு
இதற்குமுன் நுகராத வாசம்
புதிதாய் காதல் கசிய
கற்றுக்கொள்ளும் கண்கள்
முத்தம் செய்யாத இதழ்கள் என்று
பூப்படைந்து
இப்போதுதான் வெளியே வருபவள் போல்
இருக்கிறாள்.


அடையிலிருந்து வரும்
கோழிக்குஞ்சைப் போல்
நடக்கிறாள்...
சுடச்சுட உருட்டிய பஞ்சுமிட்டாய் போல்
சிரிக்கிறாள்...
இன்னும்
அவளை உங்களிடம் சொல்லமுடியாது
காதல் ரகசியமானது.

Tagged in:

2079
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments