உயிரே உயிரே பிரியாதே..

by Rameshraj 2010-02-03 12:37:46

உன் இதழ் மலர்ந்து கேட்கும் கேள்விக்கு
பதில் சொல்லக் காத்திருக்கும் அந்நேரம்..

உன் கண் பார்த்து என் கண் வெட்கப்பட
காத்திருக்கும் அந்நேரம்..

உன் செவிகள் நான் பேசுவதை கேட்காதோ
எனக் காத்திருக்கும் அந்நேரம்..




உன் சுவாசம் என் சுவாசத்தில் கலந்து எனை
இன்பப் படுத்தாதோ எனக் காத்திருக்கும் அந்நேரம்..

உன் கைகள் என் கன்னத்தில் காயம் செய்யாதோ
எனக் காத்திருக்கும் அந்நேரம்..

மட்டுமே.. நான் உன்னை
வெறுக்கிறேன்.. ஏனெனில்,

நான் இவ்வாறு ஏங்கும் வரை நீ
எனை விடுத்து தனித்திருக்கிறாயே என்று!!!..

Tagged in:

2015
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments