இன்னிசை பாடி வரும் - துள்ளாத மனமும் துள்ளும்

by Nirmala 2010-02-06 16:39:25

இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ..
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ..
ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ..
ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதிலேயே ..
இந்த வாழ்கயே ஒரு தேடல் தான் ..
அதை தேடி தேடி தேடும் மனசு தொலைகிறதே ..

கண் இல்லை என்றாலோ நிறம் பார்க்கமுடியாது ..
நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது ..
குயில் இசை போதுமே அட குயில் முகம் தேவையா ?
உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா ?
கண்ணில் காட்சி தோன்றி விட்டால் கற்பனை தீர்ந்துவிடும் ..
கண்ணில் தோன்ற காட்சி என்றால் கற்பனை வளந்து விடும் ..
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே ..

இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை ..
காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ..

Tagged in:

3026
like
1
dislike
0
mail
flag

You must LOGIN to add comments