சலங்கை ஒலி - வான் போலே வண்ணம் கொண்டு

by Sanju 2010-02-10 07:50:13

சலங்கை ஒலி
இளையராஜா

பாடல்: வான் போலே வண்ணம் கொண்டு
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் பி ஷைலஜா


வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே
ஆ அ அ

(வான்)

மண்ணைத் தின்று வளர்ந்தாயே துள்ளிக்கொண்டு திரிந்தாயே
அன்னையின்றிப் பிறந்தாயே பெண்களோடு அலைந்தாயே
கீதையெனும் சாரம் சொல்லி கீர்த்தியினை வளர்த்தாயே
கவிகள் உனை வடிக்க காலமெல்லாம் நிலைத்தாயே
வானில் உள்ள தேவரெல்லாம் போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆ அ அ

(வான்)

பெண்களுடை எடுத்தவனே தங்கைக்குடை கொடுத்தவனே
ராசலீலை புரிந்தவனே ராஜவேலை தெரிந்தவனே
மோகனங்கள் பாடிவந்து மோகவலை விரித்தாயே
சேலைகளைத் திருடி அன்று செய்த லீலை பலகோடி
மண்ணில் உந்தன் கானமெல்லாம் இன்றும் என்றும் வாழும் கண்ணா
வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே
ஆ அ அ

(வான்)

Tagged in:

1881
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments