தோல் நோய்கள் குணமாக என்ன பரிகாரம் செய்யலாம்?

by Rameshraj 2010-02-11 12:26:59

தோல் நோய்கள் குணமாக என்ன பரிகாரம் செய்யலாம்?

தோல் நோய்களான குஷ்டம், சொறி, சிரங்கு உள்ளிட்டவற்றால் நீண்ட நாள் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பாதிப்பில் இருந்து நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்.

பதில்: சிவனுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம். காராம்பசுவின் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் குஷ்டம் கூட குணமாகும் என்று சங்க கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

காராம்பசு என்று குறிப்பிட்டு கூறுவதற்கு காரணம் உண்டு. மற்ற பசுவின் பாலுக்கும் காராம் பசுவின் பாலுக்கும் சுவையிலேயே நிறைய வித்தியாசம் இருக்கும். சாதாரண பசுவின் பாலைக் கொண்டு சிவனை வணங்குவதை விட, காராம்பசுவின் பாலைக் கொண்டு சிவனை வழிபட்டால்தான் முழுமையான பலன் கிடைக்கும்.

Tagged in:

2075
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments